மயிலாடுதுறை, ஜூலை 27 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், காழியப்பநல்லூர் கிராமத்தில் ஆதரவற்ற தாய், மகனுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று வீடு கட்டி தந்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
காழியப்பநல்லூர் ஊராட்சி, என்.என் சாவடி மெயின்ரோடு, அம்பேத்கார் நகரில் வசிப்பவர் சரசு. கணவரை இழந்த இவர், தனது மகனுடன் வசித்து வரும் நிலையில் எந்தவொரு ஆதரவும் இன்றி வசிக்க வீடில்லாமல் சேதமடைந்த குடிசையில் மிகவும் வறுமை நிலையில் வசித்து வந்தனர். இதனை அறிந்த பொறையாரில் செயல்படும் தி லைஃப் ஆப் சில்ரன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரபு, சரசு-வுக்கு புதிதாக வீடு ஒன்றை தனது நிறுவனம் சார்பில் கட்டி தந்துள்ளார்.
வசிக்க இடமின்றி தவித்த ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி தந்து, தி லைஃப் ஆப் சில்ட்ரன் தொண்டு நிறுவனம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.